×

அக்னி வசந்த விழாவில் அர்சுனன் தபசு நாடகம்; பெரணமல்லூர் அடுத்த விளாநல்லூர் பகுதியில்

பெரணமல்லூர், மே 5: பெரணமல்லூர் அருகே திரவுபதி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் அக்னி வசந்த விழாவில் நேற்று நடைபெற்ற அர்சுனன் தபசு நாடகத்தினை திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர். பெரணமல்லூர் அடுத்த விளாநல்லூர் பகுதியில் அமைந்த திரவுபதி அம்மன் கோயிலில் கடந்த மாதம் 22ம்தேதி அலகு நிறுத்தி அக்னி வசந்தவிழா தொடங்கியது. இதனை தொடர்ந்து விழாவில், நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவாளர் செய்யாறு கலைச்செல்வன் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார். மேலும் 30ம்தேதி முதல் அர்சுனன்வில்வளைப்பு, ராஜசுயயாகம், துகில் உள்ளிட்ட கட்டைகூத்து நாடகங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று அர்சுனன் தபசு மரம் ஏறுதல் நாடகம் நடந்தது. இதனையொட்டி காலை 8மணிக்கு அர்சுனன் வேடமணிந்த நாடக கலைஞர் நாடக திடலில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 50அடி தபசு மரத்தில் பாட்டு பாடிய படி மேலே ஏறினார். மேலும் குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணதடை நீங்கவும் கீழே இருந்த பெண் பக்தர்களுக்கு எலுமிச்சை பழம் வழங்கினார். இந்த அர்சுனன் தபசு நாடகத்தினை திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

இதனை தொடர்ந்து வருகிற 9ம்தேதி காலை துரியோதனன் படுகளமும், மாலை 6மணிக்கு தீமிதி திருவிழாவும் நடக்கிறது. பின்னர் 10ம் தேதி தருமர் பட்டாபிஷேகத்துடன் விழா முடிவடைகிறது.

The post அக்னி வசந்த விழாவில் அர்சுனன் தபசு நாடகம்; பெரணமல்லூர் அடுத்த விளாநல்லூர் பகுதியில் appeared first on Dinakaran.

Tags : Agni Vasant festival ,Peranamallur ,Vilanallur ,Agni Vasantha festival ,Tirupati Amman Temple ,
× RELATED ஆரணியில் அக்னி வசந்த விழா தீக்குண்டத்தில் தவறி விழுந்த 4 பெண்கள் காயம்